Begin typing your search above and press return to search.
வி. களத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம்
விடுதலை சிறுத்தைகள்கடசியினர் வி களததூரில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் , வி.களத்தூர் ராயப்பா நகரில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தற்கு கிளை செயலாளர் சி. சுடலைமணி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் இரா . சீனிவாசராவ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்திால் பங்கேற்றவர்கள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் சீ. திருவள்ளுவர் சீ.அயோத்திதாசர் , சீ. திருமாவளவன், பிரகாஷ், ரஞ்சித், மா. மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.