Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ பணியாளர் பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்தது.பணியாளருக்கு பாராட்டு.
HIGHLIGHTS
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் வந்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்தது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மருதடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேன் - ஆஷா தம்பதியினர்.ஆஷா இரண்டாவது பிரசவத்திற்காக மருதடி கிராமத்திலிருந்து 108 ஆம்புலன்சில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். இந்நிலையில், பெரம்பலூர் மூன்று ரோடு துறைமங்கலம் பகுதி அருகே பிரசவ வலி அதிகமானதை தொடர்ந்து வழியிலே நிறுத்தி 108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ பணியாளர் பிரசவம் பார்த்ததில் ஆஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாயும், சேயும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமுடன் உள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் ஒட்டுநர் சுந்தரவடிவேல் ெபண்ணின் பிரசவத்திற்கு உதவிகரமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.