/* */

பெரம்பலூர்: குடும்பத் தகராறில் கைக்குழந்தைக்கு தீவைத்து தற்கொலைக்கு முயன்ற தாய்

குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி 6 மாத கைக்குழந்தையுடன் தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர்: குடும்பத் தகராறில் கைக்குழந்தைக்கு  தீவைத்து தற்கொலைக்கு முயன்ற தாய்
X

பைல் படம்.

பெரம்பலூர் மாவட்டம் வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மனைவி பிரியங்கா. இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி 6 மாத கைக்குழந்தையுடன் தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் ஆறு மாத கைக்குழந்தை மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தாய் பிரியங்காவிற்கு கழுத்து, முகம் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தை திரிஷாவிற்கு முதுகில் தீக்காயம் ஏற்பட்டது. 6 மாத கைக்குழந்தையுடன் தாய் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 27 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  8. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி