/* */

பெரம்பலூரில் சுதந்திர அமைப்பு ஓட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூரில் சுதந்திர ஓட்டத்தைஅமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் சுதந்திர அமைப்பு ஓட்டம்:  அமைச்சர் தொடங்கி வைத்தார்
X
பெரம்பலூரில் சுதந்திர அமைப்பு ஓட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் வகையில் இந்திய சுதந்திரம் மற்றும் சுதந்திர அமைப்பு ஓட்டம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கட பிரியா, தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு சுதந்திர அமைப்பு ஓட்டத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த சுதந்திர ஓட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி பாலக்கரை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது. ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியன், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி. சுருதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, தடகள பயிற்சியாளர் கோகிலா மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 18 Sep 2021 10:33 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!