Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்வது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுகேட்பு உள்ளிட்ட பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து இருபதாம் தேதி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தும்படி தி.மு.க. தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் தலைமையில் மாவட்ட கழக அலுவலகம் முன்பு கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர்,கலைஞர், மாயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.