Begin typing your search above and press return to search.
நரிக்குறவர் காலணியில் மான் வேட்டையாடிய 2 பேர் கைது.
எறையூர் சர்க்கரை ஆலை நரிக்குறவர் காலணியில் மான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் பிடித்து ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சர்க்கரை ஆலை நரிக்குறவர் காலணி பகுதியில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்வதாக மாவட்ட வன அலுவலர் கணேஷ்க்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி பெரம்பலூர் வனச்சரகர் சசிகுமார், வனவர் குமார், வன காப்பாளர்கள் பொன்னுசாமி, அன்பரசு ஆகியோர் எறையூர் நரிக்குறவர் காலணியில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் மணிகண்டன் (37), மாவீரன் (33) ஆகிய இருவரும் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த அவர்களை பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து இருவருக்கும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து இறைச்சியை கைப்பற்றி புதைத்தனர்.