/* */

நரிக்குறவர் காலணியில் மான் வேட்டையாடிய 2 பேர் கைது.

எறையூர் சர்க்கரை ஆலை நரிக்குறவர் காலணியில் மான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் பிடித்து ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

நரிக்குறவர் காலணியில் மான் வேட்டையாடிய 2 பேர் கைது.
X

 மான் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் பிடித்து ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் சர்க்கரை ஆலை நரிக்குறவர் காலணி பகுதியில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்வதாக மாவட்ட வன அலுவலர் கணேஷ்க்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி பெரம்பலூர் வனச்சரகர் சசிகுமார், வனவர் குமார், வன காப்பாளர்கள் பொன்னுசாமி, அன்பரசு ஆகியோர் எறையூர் நரிக்குறவர் காலணியில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த பகுதியில் மணிகண்டன் (37), மாவீரன் (33) ஆகிய இருவரும் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த அவர்களை பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து இருவருக்கும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து இறைச்சியை கைப்பற்றி புதைத்தனர்.

Updated On: 21 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!