Begin typing your search above and press return to search.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி இடது சாரிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடது சாரிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ரேஷன்கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 7500 வீதம் 6 மாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பபட்டன. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் மற்றும் விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.