/* */

பெரம்பலூர்: வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி மனு

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மகள்களுடன் வந்து மனு கொடுத்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி மனு
X

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி தனது மகள்களுடன் மனு கொடுப்பதற்காக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூரைச்சேர்ந்த ராஜேந்திரன் (வயது 50) மனைவி சங்கீதா.இவர்களுக்கு தமிழ்ச்செல்வி மற்றும் சர்மிளா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ராஜேந்திரன் வேலைக்காக வெளிநாடு சென்று அங்கு வேலைப்பார்த்து வந்த நிலையில் கடந்த நவ 16ம் தேதி ராஜேந்திரன் உயிரிழந்து விட்டதாக உடன் பணிபுரியும் நண்பர்கள் மூலம் அவரது மனைவி சங்கீதா மற்றும் குடும்பத்தாருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.

செய்வதறியாது தவித்த சங்கீதா தனது இரண்டு மகள்கள் மற்றும் உறவினர்களுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் மனு கொடுத்தனர்.

வெளிநாட்டில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை விரைவாக மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இறந்த ராஜேந்திரனின் மகள்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

Updated On: 2 Dec 2021 1:43 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!