/* */

பெண்ணிடம் செயின் பறிப்பு: சினிமா பாணியில் துரத்தி பிடித்த பாேலீசார்

கல்லூரிக்கு சென்ற பெண்ணிடம் தாலி கொடி பறித்து சென்ற வாலிபரை சினிமா பாணியில் துரத்திப் பிடித்த காவல்துறையினர்.

HIGHLIGHTS

பெண்ணிடம் செயின் பறிப்பு: சினிமா பாணியில் துரத்தி பிடித்த பாேலீசார்
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட வாலிபர் ஷாகுல் ஹமீது.

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி -சென்னை நெடுஞ்சாலையில் கல்பாடி பிரிவு அருகே உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிக்கு பணிக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம், அடையாளம் தெரியாத வாலிபர் 5 பவுன் மதிப்புள்ள தாலிக்கொடியை பறித்துக் கொண்டு, வாகனத்தில் தப்பி சென்றார்.

இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த புகாரின் பேரில், வேகமாக செயல்பட்ட ஹை வே பேட்ரோல் போலீசார் , வாலிபர் சென்னை சாலையில் சென்று கொண்டு இருப்பதை அறிந்து துரத்தி சென்றனர். இது குறித்து மங்கலமேடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மங்கலமேடு, திருமாந்துறை சுங்கச் சாவடியில் வேகமாக வந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர் .

பின்னர் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மதினா நகரை சேர்ந்த சையது மாசு மகன் ஷாகுல் ஹமீது (27) என்பது தெரியவந்தது. வாகனம் விபத்துக்குள்ளானதால் தாலிக்கொடியை பறித்தாகவும், போலீசார் துரத்தியதால் வழியிலேயே வீசி விட்டதையும் தெரிவித்தான்.

தங்கசங்கிலியைப் பறிகொடுத்த பெண், பேரளி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மனைவி கனகாம்பரம் என்பவரிடம் வீசி எறியப்பட்ட செயினை கண்டறிந்து போலீசார் ஒப்படைக்க உள்ளனர் . விரைந்து செயல்பட்டு, தாலிக்கொடியை மீட்டு கொடுத்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Updated On: 19 Nov 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!