/* */

முன்னாள் அமைச்சர் தாக்கியதாக நாகை அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கியதாக நாகை அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் தாக்கியதாக நாகை அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி
X
தாக்கப்பட்டவருக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைஞாயிறு பேரூராட்சியில் ஓ.எஸ்.மணியனின் சொந்த வார்டான 13 வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அஜய் ராஜாவிற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியுள்ளர். மேலும் ஓ.எஸ்.மணியன் மற்றும் அ.தி.மு.க.வுக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜெகன் தலைஞாயிறு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன், தகராறில் ஈடுபட்டு ஜெகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெகன் தலைஞாயிறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ஜெகன் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைஞாயிறு பகுதியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டு இருப்பதால் அங்கு பரப்பான சூழல் நிலவி வருகிறது.

Updated On: 4 March 2022 1:39 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!