Begin typing your search above and press return to search.
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் , திரவியப்பொருட்களை கொண்டு கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிங்காரவேலர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கார்த்திகை வழிபாடு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.