Begin typing your search above and press return to search.
நாகை சிறைச்சாலையில் இருந்த கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு
சாராய கடத்தல் வழக்கில் கீழ்வேளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகை சிறைச்சாலையில் இருந்த கைதி மர்மமான முறையில் இறந்தார்.
HIGHLIGHTS
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே புதுச்சேரி சிவன்தெற்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து(65). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாராய கடத்தல் வழக்கில் கீழ்வேளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறைச்சாலையில் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அவரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு காளிமுத்துவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். சாராயம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறைச்சாலையில் இருந்த கைதி மர்மமான முறையில் இறந்தது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.உடலை பிரேத பரிசோதனைக்கு