/* */

நாகை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்கள் கைது

நாகை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

நாகை கடல் பகுதியில்  எல்லை தாண்டி  மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்கள் கைது
X

நாகை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த இரண்டு இலங்கை மீனவர்களை கைது செய்து அழைத்து வந்தனர்.

இந்திய கடல் எல்லை பரப்பில் இந்திய கடற்படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக பைபர் படகில் வந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும், எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து நாகை துறைமுகத்துக்கு அதிகாலை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் கடலோர காவல் குழும கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள், இலங்கை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த நிமலதாஸ் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அவரும் கஜீபன் என்பவரும் நேற்று காலை வல்வெட்டுத்துறையில் இருந்து மீன் பிடிக்க வந்தபோது மாலையில் எல்லை தாண்டி மீன் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து நிமல தாஸ், கஜீபன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த கடலோர காவல் குழும போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.




Updated On: 24 Oct 2021 3:41 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!