தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல்
இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல் கூறினார்.
HIGHLIGHTS
இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆற்காட்டு துறையை சேர்ந்த மீனவர் சிவக்குமாரை முன்னாள் அமைச்சரும் நாகை அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான ஓ.எஸ்.மணியன் இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் சிவகுமாருக்கு அளித்து வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.எஸ். மணியன் இலங்கை கடற் கொள்ளையர்களால் நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர் என்றும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் நடைபெறாமல் இருந்ததாகவும், கடந்த ஒரு மாதமாக மீனவர்களின் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.
மேலும் மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மாநில அரசு குரல் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அவர், மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தி மீனவர்களைபாதுகாக்க மத்திய அரசிடம் மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் என்றார்.