/* */

"நாகை- 30 விழா" நாகையில் இன்று வெகு விமரிசையாக தொடக்கம்

நாகப்பட்டினம் மாவட்டம் உருவாகி 30 ஆண்டு ஆவதையொட்டி ‘நாகை- 30’ விழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

HIGHLIGHTS

நாகை- 30 விழா நாகையில் இன்று வெகு விமரிசையாக தொடக்கம்
X

நாகை மாவட்டம் உருவாகி முப்பதாண்டு ஆவதையொட்டி புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த நாகப்பட்டினம் பிரிக்கப்பட்டு அம்மாவட்டம் உருவாகி 30 ஆண்டுகள் ஆகின்றன. நாகப்பட்டினம் மாவட்டம் 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் விதமாக "நாகை- 30 விழா" நாகையில் இன்று வெகு விமர்சையாக துவங்கியது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியினை தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேம்பு .மா, பலா, இலுப்பை நாவல், பாரிஜாதம், உள்ளிட்ட மரக்கன்றுகளை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏ கே எஸ் விஜயன், செல்வராசு ஆகியோர் நட்டு வைத்தனர்.

பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் மீன்வளத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த வண்ண மீன்கள் உலர் கருவாடு கண்காட்சியினையும் பார்வையிட்டனர். இதில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியில், கோடியக்கரை பறவைகள் மற்றும் வனவிலங்கு சரணாலயம், நாகை மீன்பிடி துறைமுகம், உம்பளச்சேரி காளை ஆகியவையின் சிறப்புகள் குறித்தும் இடம்பெற்றிருந்தன.

இதைப்போல் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் காளான் வளர்ப்பு, வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட சீரக சம்பா மாப்பிள்ளை சம்பா கருத்தகாரு ஆத்தூர் கிச்சடி சம்பா உள்ளிட்ட நெல் வகைகளும் இடம் பெற்றிருந்தன.

நாகை மண்ணின் 30 ஆண்டுகளின் நினைவுகளை பறைசாற்றிய அரங்குகளை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவில், பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஓவியப்போட்டிகள், கட்டுரைப்போட்டி, பட்டிமன்றம் உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளன.

Updated On: 19 Oct 2021 3:29 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!