Begin typing your search above and press return to search.
நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி விழா
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாகை சின்மயாபள்ளியில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
நாகப்பட்டினம் காடம்பாடி பகுதியில் அமைந்துள்ளது சின்மயா வித்யாலயா பள்ளி. இப்பள்ளி வளாகத்தில் உள்ள சிவபெருமானுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன, முன்னதாக சிவபெருமானுக்கு யாகம் செய்யப்பட்டு புனித நீரிணை அபிஷேகம் செய்தனர். இதில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மகா சிவராத்திரியை முன்னிட்டு பள்ளி மாணவிகள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பஜனை பாடல்கள் இடம்பெற்றன, இதில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.