Begin typing your search above and press return to search.
நாகை: கோவில் குளத்தில் மூழ்கி கால்நடை மருத்துவ உதவியாளர் உயிரிழப்பு
கால்நடை மருத்துவ உதவியாளர் உமாமகேஸ்வரி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
HIGHLIGHTS
நாகை, சுப்பையா முதலியார் தெருவில் வசித்து வந்தவர் உமாமகேஸ்வரி. இவர், பிரதாபராமாபுரம் கால்நடை மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை, வெளிப்பாளையம் சிவன் கோவில் குளத்தில் மூழ்கி உமாமகேஸ்வரி இறந்தார்.
இதை கண்ட பொதுமக்கள், அவரின் உறவினர்கள் மற்றும் வெளிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வெளிப்பாளையம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால்நடை மருத்துவ உதவியாளர் உமாமகேஸ்வரி, குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.