/* */

நாகை அருகே காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை

நாகை அருகே காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை பெண்களால் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

நாகை அருகே காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை
X

நாகை அருகே காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் இன்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அதனை பூஜித்த பெண்கள், மந்திரங்கள் ஓதி, மனமுறுகி காளியம்மனையும், ஐயப்ப சுவாமியையும் வேண்டிகொண்டனர்.

பின்னர் உலக மக்கள் நன்மைக்காகவும், கடலில் மீன்வளம் பெருக வேண்டியும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும் ஒரே நேரத்தில் அனைத்து பெண்களும் பூஜை மணியை ஒலித்தவாறு சுவாமிக்கு தீபாராதனை செய்து வேண்டிக்கொண்டனர்.

Updated On: 29 Dec 2021 6:03 AM GMT

Related News