/* */

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
X

கலெக்டரிடம் அழுகிய நெல்லை விவசாயிகள் காட்டினர்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாகை வேதாரண்யம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு வந்த செம்போடை பகுதி விவசாயிகள், சமீபத்தில் பருவம் தப்பி பெய்த மழையால், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 40,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் அழுகி முளைத்துவிட்டதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் ஆட்சியர் அருண் தம்புராஜ்டம் கோரிக்கை விடுத்தனர்.

பயிர் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு முறையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் விவசாயிகளிடம் உறுதியளித்தார். இதனிடையே கூட்டத்தில், நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிகளில் பணியாளர்கள் பாரபட்சம் காட்டுவதாக சராமாரி குற்றம் சாட்டிய விவசாயிகள், இந்த விவகாரத்தில் மழுப்பல் பதில் கூறும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மீது ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியதால் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Updated On: 24 Feb 2022 9:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  4. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  5. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  6. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  8. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  9. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...