/* */

நடத்துனரிடம் ரூ. 45 லட்சம்  சுருட்டிய கும்பலின் தலைவி கைது

நாகப்பட்டினத்தில் வருமானவரித்துறை அதிகாரி போல நடித்து ஓய்வு பெற்ற நடத்துநரிடம் 45 லட்ச ரூபாய் சுருட்டிய கும்பலின் தலைவி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினத்தை அடுத்துள்ள பால்பண்ணைச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற நடத்துநர் சுப்ரமணியன். இவரிடம் நாகை ஆண்டோ சிட்டி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனை பயன்படுத்தி ராஜேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் போலி வருமானவரித்துறை அதிகாரிகள் தோற்றத்தில் நடத்துநர் சுப்ரமணியனிடம் சுமார் 45 லட்ச ரூபாய் வரை ஏமாற்றி அபகரித்து தப்பி சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுப்ரமணியன் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேஸ்வரி உள்ளிட்ட 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் ராஜேஸ்வரி தஞ்சாவூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.பின்னர் நாகை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார் நடத்துநர் சுப்ரமணியனிடம் 45 லட்ச ரூபாய் பணம் மற்றும் காரைக்காலில் பல்வேறு நபர்களை ஏமாற்றிய புகார்கள் குறித்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

Updated On: 13 March 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  2. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  4. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  5. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  6. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  9. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’