/* */

வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின் ரயில் பாதையில் 100 கிமீ வேகத்தில் சோதனை ஓட்டம்

நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் வேக சோதனைக்கான ரயில் இன்று  காலை 9.30 மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன இருப்பு பாதைகளில் புழுதி பறந்தது இதனை தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் தீபக் நாராயண காட்டோ தலைமையில் தென்னக ரயில்வே  அதிகாரிகள். பங்கேற்றனர்.

HIGHLIGHTS

வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின் ரயில் பாதையில்  100 கிமீ வேகத்தில்  சோதனை ஓட்டம்
X

வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின் ரயில் பாதையில் 100 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம்  நடைபெற்றது

வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் மின் ரயில் பாதையில் 100 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி புதிய அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 2010 டிசம்பர் 20 ஆம் தேதி வேளாங்கண்ணி க்கும் நாகப்பட்டினத்திற்கு தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து நாகையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவு வரையிலான பகுதிகளில், மண்ணில் உரிய உறுதித் தன்மை இல்லை என்பதால் இத்தடத்தில் இயங்கும் ரயில்களுக்கு அதிகபட்சம் வேகம் 30 கி.மீட்டர் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

30 கி.மீட்டர் வேகம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மண்ணின் உறுதித் தன்மையற்ற காரணத்தால், இத்தடத்தில் 15 முதல் 20 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், நாகையிலிருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள வேளாங்கண்ணியைச் சென்றடைய ஒவ்வொரு ரயிலுக்கும் சுமார் 30 முதல் 40 நிமிடம் தேவைப்பட்டது. இதனால், இத்தடத்திலான ரயில் சேவை துரித போக்குவரத்துக்குரியதாக இல்லை.

இது குறித்த கோரிக்கைகளின் அடிப்படையில், நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணியை ரயில்வே துறை மேற்கொண்டது. ஏறத்தாழ சுமார் 5 கி.மீட்டர் தொலைவுக்கு நடைபெற்றுள்ள இப்பணி, அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களாக இத்தடத்திலான இருப்புப் பாதையில் கருங்கல் பேக்கிங் பணிகள் நிறைவடைந்தன .இந்த நிலையில், நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் வேக சோதனைக்கான ரயில் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன இருப்பு பாதைகளில் புழுதி பறந்தது.

இதனை தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் தீபக் நாராயண காட்டோ தலைமையில் தென்னக ரயில்வே அதிகாரிகள். பங்கேற்றனர். இந்த வேகச் சோதனை பிறகு, நாகை - வேளாங்கண்ணி தடத்தில் ரயில்கள் சுமார் 60 முதல் 70 கி.மீட்டர் வேகத்தில் இயங்க அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2020-ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி முதல் முடங்கியிருக்கும் வேளாங்கண்ணி ரயில் சேவையும், இந்த சோதனைக்கு பின்னர் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Updated On: 26 Feb 2022 5:39 PM GMT

Related News