Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வி கே சசிகலா சுவாமி தரிசனம்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார்
HIGHLIGHTS
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கடந்த சில நாட்களாக முன்பு சசிகலா அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சனிக்கிழமை வி கே சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். காமாட்சி அம்மன் கோவில் நுழைவுவாயிலில் அமுமுக வேட்பாளர்கள் ஆர்வி ரஞ்சித்குமார். என் மனோகரன் ஆகியோர் சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இவர்களைத் தவிர அமமுக தொண்டர்கள் பலரும் திரண்டு வந்து சசிகலாவை வரவேற்றனர்.