Begin typing your search above and press return to search.
அரசு பஸ்களில் போலீசாருக்கு இலவச பயணம் ரத்து; வாரண்ட் இருந்தால் மட்டுமே அனுமதி
போலீசார் அரசுப் பேருந்துகளில் உரிய வாரண்ட் இல்லாமல் இலவச பயணம் மேற்கொள்ளக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
HIGHLIGHTS
தமிழக மனித உரிமை ஆணையம் கையாண்ட வழக்கு ஒன்றில், இனி அரசுப் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் காவலர்கள் பயணம் செய்ய காவல்துறை அனுமதிக்கக் கூடாது. மேலும், உரிய டிக்கெட் பெற்று பயணம் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் காவல்துறைக்கு அறிவுறுத்தியது.
இதனடிப்படையில் இதுகுறித்து தமிழக டிஜிபி., சைலேந்திரபாபு காவல்துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், எந்த ஒரு காவலரும் வாரன்ட் இல்லாமல் பேருந்தில் இலவசமாக பயணிக்க கூடாது. இதனை அனைத்து மாவட்ட காவல்துறையினரும் பின்பற்ற வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பியுளளார்.