/* */

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாய சங்கத்தினர் மறியல்

வேளாண்மை சட்டம் மற்றும் மின்சார ஒழுங்கு சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி, காஞ்சி மாவட்ட விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாய சங்கத்தினர் மறியல்
X

 காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர். 

மத்திய அரசின் மூன்று வேளாண்மை சட்டங்கள் மற்றும் மின்சார ஒழுங்குமுறை சட்டம், பொது சொத்துக்களை தனியாருக்கு அளித்தல், பெட்ரோல் , டீசல் , விலை உயர்வை திரும்பப் பெறக்கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் மற்றும் கடையடைப்புக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன.

இந்த நிலையில், காஞ்சிபுரம் தேரடி அருகில், தமிழ்நாடு விவசாய சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மற்றும் மின்சார சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறக்கோரி கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில், தேரடி அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Updated On: 27 Sep 2021 6:00 AM GMT

Related News