Begin typing your search above and press return to search.
வீட்டில் பதுங்கி இருந்த 7 அடி நீள நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்
நீண்ட போராட்டத்துக்குப் பின் மோட்டார் அறையின் அருகே பதுங்கியிருந்த 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர்
HIGHLIGHTS
திண்டுக்கல் அருகே வாழைக்காய்பட்டி ஜே.பி.நகரை சேர்ந்தவர் கலீல் அஹமது.இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரின் வீட்டின் மோட்டார் அறையில் புகுந்திருந்த பாம்பை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர்.பின்னர், நீண்ட போராட்டத்துக்குப் பின் மோட்டார் அறையின் அருகே பதுங்கியிருந்த 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர். பின்னர் கோணிப்பையில் போட்டு கட்டி எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.