பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் தனியார் நடத்தி வந்த மதுபான கடைகளை அரசாங்கம் ஏற்று நடத்தி 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 19-வது ஆண்டு நேற்று தொடங்கியுள்ளது.
இதில் பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தற்பொழுது வரை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று 19-ம் ஆண்டு துவங்கிய நிலையில், திண்டுக்கல்லில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
கேரள அரசாங்கம் டாஸ்மாக் கடைகளை நடத்துவது போல் அனைத்து சலுகைகளையும் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
மதுவிலக்கை அமல்படுத்தினால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வேறு துறை துறைகளில் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க ஏஐடியுசி திண்டுக்கல் மாவட்ட கிளை சார்பில் மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.