Begin typing your search above and press return to search.
திண்டுக்கல் மாநகராட்சி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
திண்டுக்கல் மாநகராட்சி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் போக்குவரத்து இடையூறு மட்டுமின்றி விபத்து ஏற்படும் அபாயம்.
HIGHLIGHTS
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பசு மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
காவல்துறை கண்காணிப்பார் கடந்த சில தினங்களுக்கு முன் கூறிய (மாடுகள் உரிமையாளர் மீது வழக்கு பதியப்படும் என) செயலை நடைமுறைபடுத்தினால் மட்டுமே மாடுகளினால் ஏற்படக்கூடிய பெரும் விபத்துகளும், போக்குவரத்தும் சரி செய்யப்படும்.
மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு சாலைகளில் இதுபோன்ற பசு மாடுகள் ரோட்டில் படுத்துக்கொண்டும், நின்று கொண்டும் உள்ளது. அதனையும் மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.