குழந்தைகள் மீதான சீண்டலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு முகாம்
திண்டுக்கல்லில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பு குறித்து, தனியார் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம், ஏடிஎஸ்பி.லாவண்யா தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்பி. சீனிவாசன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்த புகார் அதிகரித்து வருகிறது. உங்களுக்கோ, உங்கள் அருகாமையில் இருப்பவர்களுக்கோ, உங்களது உறவினர்களுக்கோ ஏதேனும் பாலியல் ரீதியான தொந்தரவு ஏற்பட்டால், உடனடியாக காவல் துறையினரை அல்லது மாவட்ட நிர்வாகத்தை தயக்கமின்றி தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, வேடசந்தூர் கல்வி அலுவலர் கீதா, டிஎஸ்பி.கோகுலகிருஷ்ணன் ஆய்வாளர் உலகநாதன், குழந்தை கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் செல்வகுமாரி, ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.