திண்டுக்கல்: ஆசிரியர், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு விழா
திண்டுக்கல்லில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில், ஆசிரியர் தினம், மருத்துவர் தினம், வழக்கறிஞர் தினம், பொறியாளர் தினம்,வர்த்தக தினம், மற்றும் உலக சுற்றுச்சூழல் தினம் ஆகியன அடங்கிய அறுபெரும் விழா, திண்டுக்கல்லில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்களுக்கும், கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த 2 மருத்துவர்களுக்கும் 2 செவிலியர்களுக்கும் மற்றும் கொரோனா காலத்தில் பணிபுரிந்த சிறந்த வட்டாட்சியரரை பாராட்டியும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் விசாகன், பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் புரவலர் டிசிஎஸ் மண்டலத் தலைவர் செண்பகமூர்த்தி, பொறுப்பாளர் திப்பு சீயஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.