/* */

ரேசன் கடையில் தரமற்ற அரிசி: பொதுமக்கள் புகார்

பண்ருட்டி அருகே ரே‌ஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

ரேசன் கடையில் தரமற்ற அரிசி: பொதுமக்கள் புகார்
X

செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியை குப்பையில் கொட்டிய மக்கள் 

பண்ருட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கு செட்டிப்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த பகுதி மக்கள் செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்ற முறையில் உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் அரிசி சமைத்து உண்ண முடியாதவாறு அளவில் பெரியதாகவும், புழு, வண்டுகள் மற்றும் அரிசியில் தூசி, சிறு கற்கள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன.

இந்த அரிசியை பலமுறை கழுவி சமைத்தாலும் அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ரே‌ஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ரே‌ஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Updated On: 29 March 2022 3:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...