/* */

நெய்வேலி அருகே இளைஞர் கழுத்தறுத்து படுகொலை

நெய்வேலி அருகே குற்ற வழக்கில் கைதாகி சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் கழுத்தறுத்து படுகொலை

HIGHLIGHTS

நெய்வேலி அருகே இளைஞர் கழுத்தறுத்து படுகொலை
X

நெய்வேலி அருகே உள்ள மந்தாரகுப்பத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் அருண்குமார் (35). கூலி தொழிலாளியான இவர் குற்ற வழக்கில் கைதாகி சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.இந்த நிலையில், என்.எல்.சி நிறுவனம் 2-வது சுரங்க நுழைவு வாயில் அருகே முட்புதரில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட நிலையில், அருண்குமார் சடலமாக கிடந்தார்.

இதனை கண்ட அந்த பகுதி மக்கள் மந்தாரகுப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து ராஜன் அளித்த புகாரின் பேரில் மந்தாரகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறையில் இருந்து வெளிவந்த இளைஞர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 2 Sep 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!