/* */

திருமண ஆசைக்காட்டி இளம் பெண் ஏமாற்றம், மாணவருக்கு 10 ஆண்டு ஜெயில்

சிதம்பரம் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய மாணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதி மன்றம்.

HIGHLIGHTS

திருமண ஆசைக்காட்டி இளம் பெண் ஏமாற்றம், மாணவருக்கு 10 ஆண்டு ஜெயில்
X

பைல் படம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (24), சிதம்பரம் அண்ணா மலை பல்கலைகழக மாணவர். இவ ருக்கும், சிதம்பரத்தில் வேலை பார்த்து வந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரும், ஒன்றாக பஸ்சில் பயணம் செய்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இப்பழக்கம் காதலாக மாறி யுள்ளது. இதன் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி இருவரும் உல் வாசமாக இருந்துள்ளனர். இதற்கிடையே பெண்ணின் தரப்பினர். அருண்குமாரிடம் திருமணம் செய்துகொள்ள கேட்டுள்ளனர். ஆனால் அருண்குமார், தனது வீட்டில் சகோதரிக்கு திருமணம் ஆக வேண்டும் என்பதால் பொறுத்திருங்கள் என கூறிய தாக கூறப்படுகிறது.

ஆனால் சகோதரிக்கு திருமணம் ஆன நிலையில் அருண்குமார் தொடர்ந்து இளம்பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண்ணின் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் மீதான விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில்நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்து நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில், இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய மாணவர் அருண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்ட னையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராத தொகை கட்ட தவறினால் மேலும் இரண்டு வருட சிறை தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அருண்குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்,

Updated On: 30 July 2021 1:53 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்