/* */

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆகஸ்ட் 9 அன்று கடலூர் மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு

HIGHLIGHTS

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டம்
X

கடலூரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது

கடலூர் இந்திய தொழிற்சங்க மையம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளின் கூட்டு கூட்டம் சிஐடியு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் .ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை சட்டம், தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆகஸ்ட் 9 அன்று கடலூர் மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

இதனை விளக்கி ஜூலை 27 முதல் ஒரு வார காலம் பிரச்சார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 July 2021 1:13 PM GMT

Related News