Begin typing your search above and press return to search.
கடலூரில் ஊரடங்கு விதிகளை மீறும் மக்கள் : காவல்துறை எச்சரிக்கை
கடலூரில் ஊரடங்கு விதிகளை மீறுபவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
HIGHLIGHTS
கடலூரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை கடை, மீன் இறைச்சி கடைகள் பத்து மணி வரையும் திறந்திருக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல தடை விதித்தது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் ஊரடங்கு அமலில் வந்த நிலையில் கடலூரில் பொதுமக்கள் அரசின் உத்தரவை மதிக்காமல் இன்று பதினொரு மணியை தாண்டியும் பொது மக்கள் சாலைகளில் சாரைசாரையாக சென்ற வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரித்து சென்றனர். இருப்பினும் ஊரடங்கை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.