/* */

கடலூர்: உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ஒரு நாள் சம்பளம் வழங்கிய காவலர்கள்!

கடலூரில் கொரோனாவால் உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்துக்கு காவலர்கள் ஒரு நாள் சம்பவத்தை நிவாரணமாக வழங்கினர்.

HIGHLIGHTS

கடலூர்: உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ஒரு நாள் சம்பளம் வழங்கிய காவலர்கள்!
X

கொரோனாவால் உயிரிழந்த காவலர் மனைவிக்கு சக போலீசார் ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய காட்சி.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர் காவல் நிலையம் தலைமை காவலர் ராஜ்குமார் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அதேபோல், கடலூர் முதுநகர் காவல் நிலையம் தலைமை காவலர் அரங்கநாயகம், கொரோனா தொற்று ஏற்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கொரோனாவில் இறந்துபோன இரண்டு தலைமை காவலர்களின் குடும்பத்தார்க்கு உதவும் நோக்கில், கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரை தங்களது ஒரு நாள் ஊதியத்தை மனமுவந்து இரு காவலர் குடும்பதகொடுத்தனர்.

இந்த தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் உத்தரவின்பேரில், தலைமை காவலர் அரங்கநாயகத்தின் மனைவி அருள்குமாரி, மற்றும் தலைமைக்காவலர் ராஜ்குமாரின் மவி அலமேலு ஆகியோரிடம் தலா ரூ.18,18,445 காசோலையை கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி வழங்கினார்.

Updated On: 5 Jun 2021 11:02 AM GMT

Related News