/* */

கடலூர் மாவட்ட மருத்துவ சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம்

HIGHLIGHTS

கடலூர் மாவட்ட மருத்துவ சங்கம் சார்பில் கொரோனா  விழிப்புணர்வு பேரணி
X

சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் 

கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஏழாம் தேதி வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று கடலூர் நகர அரங்கில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது, முக கவசம் அணிவோம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்போம், குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி செவிலியர்கள் அணிவகுத்து நின்றனர்.

கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் கடலூர் நகர அரங்கில் இருந்து நேதாஜி சாலை வழியாக சுமார் மூன்று கிலோமீட்டர் சைக்கிளில் சென்று மீண்டும் நகர அரங்கில் வந்து பேரணியை முடித்து வைத்தார்.

இப்பேரணியில் மாவட்ட ஆட்சியர் உடன் செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் பேரணியாகச் சென்றனர். அதனைத் தொடர்ந்து புனித வளனார் பள்ளி வளாகத்தில் குரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு கொரோனா தொற்று கிருமிகள் நீங்கும் வகையில் கைகளை சோப்பினால் சுத்தம் செய்யும் வழிமுறைகள் குறித்து பயிற்சி செவிலியர்கள் மூலம் செயல்விளக்கத்தினை அனைவருக்கும் செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன்,மாவட்ட பள்ளிக் கல்வி அலுவலர், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Aug 2021 10:51 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!