/* */

சென்னையில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

சென்னையில் அரசு பஸ் ஜன்னல் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சென்னையில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
X

போதை ஆசாமியால் உடைக்கப்பட்ட அரசு பஸ் ஜன்னல் கண்ணாடி

சென்னை திருவான்மியூர் பணிமனையிலிருந்து சென்ட்ரலுக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ஜெயந்தி சிக்னல் அருகே வந்தபோது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் பஸ்சில் ஏறியுள்ளார். மது போதையில் இருந்த அந்த நபரிடம் நடத்துனர் வடிவேலு டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார், அதற்கு டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி நடத்துனர் வடிவேலை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு எல்.பி சாலையில் இறங்கி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


Updated On: 7 March 2022 11:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...