Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சென்னையில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
சென்னையில் அரசு பஸ் ஜன்னல் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
சென்னை திருவான்மியூர் பணிமனையிலிருந்து சென்ட்ரலுக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ஜெயந்தி சிக்னல் அருகே வந்தபோது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் பஸ்சில் ஏறியுள்ளார். மது போதையில் இருந்த அந்த நபரிடம் நடத்துனர் வடிவேலு டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார், அதற்கு டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி நடத்துனர் வடிவேலை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு எல்.பி சாலையில் இறங்கி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.