/* */

மணலியில் இறந்த குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்த சம்பவத்தால் பரபரப்பு

மணலியில் இறந்த குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

மணலியில் இறந்த குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்த சம்பவத்தால் பரபரப்பு
X

பைல் படம்.

சென்னை திருவொற்றியூர் அடுத்த, மணலி பகுதியில் இறந்த குழந்தையை வீட்டிலேயே வைத்து போலீசுக்கு தகவல் சொல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.

மணலி, திருவள்ளுவர் பகுதியில் வசித்து வருபவர் நிஷாந்த்(27). இவரின் மனைவி யமுனா, இவருக்கு, கடந்த மார்ச் மாதம் அன்று, எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு. மஞ்சள் காமாலை இறந்ததால் குழந்தை கண்ணாடி பெட்டியில் வைத்து பராமரிக்கப்பட்டது. பின்னர், யமுனா, குழந்தையுடன் வீட்டிற்கு வந்து விட்டார்.

இந்த நிலையில், குழந்தையுடன் வீட்டுக்கு வந்தபோது குழந்தை இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு மாடிக்கு ஓடினார். அப்போது குழந்தைக்கும், யமுனாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை இறந்து விட்டது என தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு மற்றும் உறவினர்களுக்கும் சொல்லாமல், குழந்தையை வீட்டில் வைத்து, யமுனா , சிகிச்சை பெறுவதற்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு விஷயம் தெரிந்து, போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 16 April 2022 3:30 AM GMT

Related News