/* */

வியாபாரிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூல்: ரவுடி கைது

சென்னை ஓட்டேரியில் வியாபாரிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூல் செய்த ரவுடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வியாபாரிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூல்: ரவுடி கைது
X
பைல் படம்

சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கடைகளில் இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் வியாபாரிகளை மிரட்டி வருவதாகவும் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து வருவதாகவும் புளியந்தோப்பு உதவி கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் மாமூல் கேட்டு மிரட்டிய நபர் குறித்து உதவி கமிஷனரின் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அயனாவரம் திக்காகுளம் ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த இளமாறன் வயது 20 என்ற நபர் வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூல் செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்தது

மேலும் இவர் மீது ஓட்டேரி அயனாவரம் ஐசிஎப் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இவரை பிடிக்க போலீசார் ஆயத்தமாயினர் நேற்று ஓட்டேரி ஏகங்கி புரம் சந்திர யோகி சமாதி தெரு பகுதியில் இளமாறன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் இளமாறனை மடக்கிப் பிடித்தனர் அவரிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது ஓட்டேரி போலீசார் இளமாறன் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Dec 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!