/* */

கத்தாா் நாட்டிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த 750 கிராம் தங்கப்பசை பறிமுதல்

சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை எனக்கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்ற பயணி பிடிபட்டார்

HIGHLIGHTS

கத்தாா் நாட்டிலிருந்து  விமானத்தில் கடத்தி வந்த  750 கிராம் தங்கப்பசை பறிமுதல்
X

கத்தாரிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட தங்கப் பசை

கத்தாா் நாட்டிலிருந்து சென்னை விமானத்தில் கடத்தப்பட்ட ரூ.21 லட்சம் மதிப்புடைய 750 கிராம் தங்கப்பசையை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்து,கடத்தல் பயணியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்..

கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் சிறப்பு பயணிகள் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த ஆதில் முகமது ஜான்ரபீக் (28) என்ற பயணி தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு,கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றாா்.ஆனால் அதிகாரிகளுக்கு அவா் மீது சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அந்த பயணியை மீண்டும் உள்ளே வரவழைத்து,முழுமையாக பரிசோதித்தனா்.அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய பாா்சலை கண்டுப்பிடித்து சோதனையிட்டனா்.அதனுள் தங்கப்பசை இருந்ததை கண்டுப்பிடித்தனா்.

அதை வெளியே எடுத்து ஆய்வு செய்ததில் 750 கிராம் நங்கப்பசை இருந்தது.அதன் மதிப்பு ரூ.21 லட்சம்.இதையடுத்து தங்கப்பசையை பறமுதல் செய்த அதிகாரிகள், ரபீக்கை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 4 Feb 2022 12:15 PM GMT

Related News