/* */

கொடுங்கையூரில் இளைஞர்களை தாக்கி செல்போன் பறித்த ரவுடி கைது

கொடுங்கையூரில், விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் செல்போன் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கொடுங்கையூரில் இளைஞர்களை தாக்கி செல்போன் பறித்த ரவுடி கைது
X

சென்னை கொடுங்கையூர் சின்னாண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் 22 . இவர், நேற்று மாலை தனது நண்பர்களுடன் கண்ணதாசன் நகர் 5வது பிளாக் பகுதியில் உள்ள, சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 பேர், வினோத் குமார் மற்றும் அவரது நண்பரான ரெட்டில்ஸ் பகுதியைச் சேர்ந்த அனில்குமார் 21 ஆகிய இருவரையும் அடித்து, அவரிடம் இருந்து 35000 ரூபாய் மதிப்புள்ள 2 செல்போன்களை பறித்துச் சென்றனர். உடனே அருகில் விளையாடியவர்கள் இதுகுறித்து, கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் உடனடியாக அங்கு சென்ற கொடுங்கையூர் போலீசார் ஓட்டேரி மேட்டுப்பாளையம் 2-வது தெருவைச் சேர்ந்த சாய்வீரா 24 என்ற நபரை கைது செய்தனர். மேலும் மற்றொரு நபரான மதன் என்கின்ற அறுப்பு மதன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சாய் வீராவை கொடுங்கையூர் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். மற்றொரு ரவுடியான மதனை தேடி வருகின்றனர்.

Updated On: 7 March 2022 6:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  2. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  3. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  4. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  5. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  6. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  7. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  8. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  9. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!