/* */

வியாசர்பாடியில் வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 5 பேர் கைது

வியாசர்பாடியில் வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வியாசர்பாடியில் வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 5 பேர் கைது
X

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 7வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் மாதவன் 21. இவர் புழல் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மாதவன் மற்றும் அவரது நண்பர்கள் குடித்துவிட்டு, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 63 வது பிளாக் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏற்கனவே அங்கு மது போதையில் இருந்த சில இளைஞர்கள், மாதவனிடம் தகராறில் ஈடுபட்டு அடித்துள்ளனர்.

அதன் பிறகு அங்கிருந்தவர்கள், மாதவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்கு சென்ற மாதவன் சிறிது நேரத்தில் மீண்டும் தன்னை தாக்கியவர்களிடம் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அங்கிருந்த இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாதவனை, தலை பின்பக்க கழுத்து, வலது கை உள்ளிட்ட இடங்களில் பலமாக வெட்டினர். இதில் மாதவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார்.

அருகில் உள்ளவர்கள், மாதவனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் 22 ராக்கி 19 தீபன் ராஜ் 20 கல்யாண புரத்தைச் சேர்ந்த ஸ்ரீகுமார் 19 மற்றும் 17 வயது சிறுவன் என ஐந்து பேரை கைது செய்தனர். சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கும், மற்ற 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர்.

Updated On: 1 March 2022 3:00 AM GMT

Related News