/* */

பட்டாக் கத்திகளுடன் சுற்றித் திரிந்த ரவுடி துப்பாக்கி முனையில் கைது

தாம்பரம் அருகே பட்டாக் கத்திகளுடன் சுற்றித் திரிந்த ரவுடி துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பட்டாக் கத்திகளுடன் சுற்றித் திரிந்த ரவுடி துப்பாக்கி முனையில் கைது
X

பட்டாக்கத்தியுடன் கைது செய்யப்பட்டவர்கள்.

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியை சேர்ந்தவர் விவேக் ராஜ் (28), இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. பீர்க்கன்காரணை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரை புகழ்ந்து இவரது ஆதரவாளர்கள் வீடியோ வெளியிட்டு அச்சுறுத்தி வந்தனர்.

விவேக் ராஜின் கூட்டாளியான ராகுலின் தம்பி பப்லு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ரவுடி சேலையூர் லெனின் மற்றும் முகேஷ் அவர்களின் கூட்டாளிகளை கொலை செய்ய திட்டமிட்டு பட்டாக்கத்திகளை தயார் செய்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் ரவுடி விவேக் ராஜ் கோவளம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. தாம்பரம் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து விவேக்ராஜ் மற்றும் விஷால்(28), ஆகியோரை கைது செய்து. அவர்களிடமிருந்து 3 பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இவர் மீது வழக்குப்பதிவு செய்த தாம்பரம் போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 11 Sep 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!