/* */

பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு நிதி உதவி

பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த, உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, நிதி உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு நிதி உதவி
X

பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த, உதவி ஆய்வாளர் ஹரிராமன் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த, உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, நிதி உதவி வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஹரிராமன்(58), சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர். குடும்பத்துடன் மாடம்பாக்கம், ஏ.எல்.எஸ்., நகரில் வசித்து வந்தார். 1986ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து, பதவி உயர்வு பெற்று, சேலையூர் காவல் நிலையத்தில், எஸ்.ஐ., யாக பணிபுரிந்து வந்த, ஹரிராமன் கடந்தாண்டு, அக்டோபர் 27ம் தேதி, காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது, குடும்பத்தினருக்கு உதவ, முடிவு செய்த சேலையூர் சரக போலீசார், தங்களால் இயன்ற, நிதியை திரட்டினர். இது குறித்து, தாம்பரம் காவல் ஆணையர் ரவி அவர்களுக்கு தெரிவித்து, ஹரிராமனின் மனைவி ராஜேஸ்வரியை, ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்து ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியை ஆணையர் ரவி வழங்கினார்.

Updated On: 13 April 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!