/* */

சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்த 4 பேர் கைது

சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.

HIGHLIGHTS

சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்த 4 பேர் கைது
X

பைல் படம்

சென்னை பெரும்பாக்கத்தில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் பெரும்பாக்கம் காவல் நிலைய பழைய குற்றவாளிகள் என்பதும், கண்ணகி நகரைச் சேர்ந்த துரைராஜ்(25), தனுஷ் (எ) டாமல்(19), வீரமுத்து(19) மற்றும் நாகராஜ் (எ) நாகு(24) என தெரிய வந்தது.
இந்நிலையில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது பெரும்பாக்கம், ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி என சென்னையின் புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிவந்துள்ளது.
அவர்களிடமிருந்து பெரும்பாக்கம் காவல் நிலைய வழக்கில் செல்போன் மற்றும் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியில் திருடப்பட்ட 6 1/2 சவரன் தங்க நகை மற்றும் கேமரா ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த பெரும்பாக்கம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!