/* */

கீழவெண்மணியில் உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கம்

கீழவெண்மணியில் உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கட்சிசார்பில் தா.பழூரில் கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தினர்

HIGHLIGHTS

கீழவெண்மணியில் உயிர்நீத்த தியாகிகள் தினத்தையொட்டி  வீரவணக்கம்
X

நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்கள் 44 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவ தினமான டிசம்பர் 25 ஆம் தேதி உயிர் நீத்த தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுவது வழக்கம். அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீழவெண்மணி கிராமத்தில் உயிர் நீத்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செல்வராஜ் முன்னிலை வகித்தார். அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் கொடியேற்றி பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் செல்வராஜ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக தங்கராசு வரவேற்று பேசினார். காமராஜ் நன்றி கூறினார்.

Updated On: 25 Dec 2021 5:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...