/* */

தா.பழூர் அருகே தாயை கொலை செய்து ஓடையில் வீசிய மகன் கைது

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தாயை கொலை செய்து ஓடையில் வீசிய மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தா.பழூர் அருகே தாயை கொலை செய்து ஓடையில் வீசிய மகன் கைது
X

கைது செய்யப்பட்ட செல்வம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அமிர்தராயங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் காமாட்சி 85 வயது மதிக்கத்தக்கவர். இவருக்கு 3 மகள் மற்றும் 2 மகன் உள்ளனர். இதில் 3 மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில் ஒரு மகன் இறந்து விட்டார். இதில் கடைசி மகனான செல்வம் என்பவர் அடிக்கடி சொத்து பிரச்சினை காரணமாக தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியாக வாழ்ந்து வந்தவர் கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு போனவர் வீடு திரும்பி வரவில்லை. இதனால் காணாமல் போன காமாட்சியை உறவினர்கள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வீட்டில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் உள்ள தனது கொல்லை அருகே உள்ளஅணைக்குடம் கிராமத்தில் இருந்து வரும் பாட்டாகோவில் ஓடையில் காமாட்சி உடல் கிடந்தது கடந்த 18 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தா.பழூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவரது கடைசி மகன் செல்வம் என்பவர் கொலை செய்ததாக காவல்துறையினர் அவரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 Dec 2021 10:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...