/* */

காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பேரணியில் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டவாறு பொதுமக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

HIGHLIGHTS

காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

போதைப் பொருள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போலீசார்.

அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தொடங்கி பஸ் நிலையத்திற்கு வந்து முடிவடைந்தது. பேரணியை ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தொடங்கி வைத்தார். பேரணியில் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டவாறு பொதுமக்களுக்கு விழுப்ப்புணர்வு ஏற்படுத்தி பேரணி சென்றனர். இதில் போலீசார்கள், பொதுமக்கள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jun 2022 7:23 AM GMT

Related News