/* */

அரியலூர் அருகே மணல் கடத்தல், 6 மாட்டு வண்டிகள் மாடுகளுடன் மணல் பறிமுதல்

அரியலூர் அருகே தா.பழூர் கொள்ளிடம் ஆற்றில் அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற 6 மாட்டு வண்டிகள் மணலுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே மணல் கடத்தல், 6 மாட்டு வண்டிகள் மாடுகளுடன் மணல் பறிமுதல்
X

தா.பழூர் அருகே உள்ள கீழகுடிகாடு கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஆற்றுப் பகுதியில் வந்த 6 மாட்டு வண்டிகளை சோதனை செய்ததில், அரசு அனுமதி இன்றி மணல் கடத்திச் வந்தது தெரியவந்தது.

மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர்களை விசாரணை செய்ய முயன்றபோது, வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிய நிலையில், தா.பழூர் விஏஓ காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

காவல்துறையினர் மாட்டு வண்டியை மாடுகளுடன் பறிமுதல் செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 3 Jun 2021 5:48 AM GMT

Related News