/* */

ஒருகிலோ முருங்கை 50 பைசா: கடும் விலை வீழ்ச்சியால் நிலைகுலைந்த விவசாயிகள்

ஒரு கிலோ முருங்கைக்காய்கள் 50 பைசாவிற்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

ஒருகிலோ முருங்கை 50 பைசா: கடும் விலை வீழ்ச்சியால் நிலைகுலைந்த விவசாயிகள்
X

பறிக்காமல் மரத்திலேயே விடப்பட்டுள்ள முருங்கை காய்.  

அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தோட்டப்பயிராக முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தா.பழூர், காரைக்குறிச்சி, இருகையூர், நாயகனைப்பிரியாள், அணைக்குடம் பொற்பொதிந்தநல்லூர், சோழமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தீவிர முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உற்பத்தி செய்த முருங்கைக்காய்கள் மூட்டைகளாக கட்டப்பட்டு உள்ளூர் வியாபாரிகள் மூலமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக விவசாயிகளிடம் இருந்து 1 கிலோ முருங்கைக்காய் 1 ரூபாய்க்கும் குறைவான விலையில் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த வாரத்தில் ஒரு கிலோ முருங்கைக்காய் 50 பைசாவுக்கு விலை பேசப்பட்டதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பருவத்தில் முருங்கை விவசாயம் செய்ய ரூ.22 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.10-க்கு குறைவாக கொள்முதல் செய்யப்பட்டால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்படும். இந்நிலையில் 50 பைசாவிற்கு முருங்கைக்காய்கள் விலை பேசப்படுவதால் விவசாயிகள் நிலை குலைந்து உள்ளனர்.

மேலும் மனமுடைந்த நிலையில் முருங்கை செடியில் இருந்து காய்களை பறிக்கும் பணியை விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர். முருங்கைக்காய்கள் பறிக்கப்படாததால் செடியிலேயே சடை, சடையாக தொங்குகின்றன. தற்போது விற்கும் விலைக்கு 600 கிலோ முருங்கைக்காய் விற்பனை செய்தால் மட்டுமே ஒரு தொழிலாளிக்கு கூலி வழங்க முடியும். எனவே அரசு முருங்கைக்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 10 Aug 2021 4:23 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!